நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – கடிதங்கள்
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கடிதம் வணக்கம் அருண்மொழி, உங்கள் ’நிலத்தினும் பெரிதே’ கட்டுரையை படித்தேன். நான் தொடங்கும் போது ஏழு, எட்டு பக்கமிருக்கும் என நினைத்தேன். என்னால் யோசிக்கவே முடியவில்லை. அறுபத்தி மூன்று பக்கம் எழுதியிருக்கிறீர்கள். அதனை தொடங்கிய பிறகு கீழே வைக்க முடியவில்லை. அப்படியே ஒரே இடத்திலிருந்து அதனைப் படித்து முடித்துவிட்டு தான் அடுத்த வேலை பார்த்தேன். நீங்கள் இதனையே பிடித்துக் கொள்ளுங்கள், அருமையாக இருந்தது, அற்புதமாக இருந்தது. இந்த எழுத்தை தான் நீங்கள் பிடித்துக் கொள்ள…
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 2
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு -1 வாசிக்க… மறுநாள் சனிக்கிழமை. காலையில் முன்னதாகவே போய் ஸ்டேஷனில் காத்திருந்தேன். இருவரும் வந்தார்கள். ஜெயன் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார். தம்பி இறுகிய முகத்துடன் வந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு கண் கலங்கியது. அவன் முன்னே நடக்க நாங்கள் இருவரும் பின்னே நடந்தோம். ஜெயன் ஒரு கடிதத்தை என் கையில் திணித்தார். நான் அவன் பார்க்கும் முன்பு கைப்பையில் ஒளித்தேன். அவன் பார்த்திருப்பான். ஜெயன் கையை பற்றிக்கொண்டார்.…
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1
மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவின் வீட்டிற்கு நானும் ஜெயனும் பலமுறை சென்றிருக்கிறோம். அவர் ஜெயனுக்கு குருவும் தந்தையுமானவர். கேரளத்தில் திருச்சூரில் இருந்தார். எங்களுக்கு திருமணமாகி நான்கைந்து வருடங்கள் கழித்து ஒருமுறை அங்கு சென்றபோது, அவர் வீட்டு முற்றத்தில், மாமரத்தடியில் அமர்ந்து அவருடன் தனியே பேசும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. அப்போது ஆற்றூர் என்னிடம் ஜெயன் பற்றி ஏதோ கேட்டார். நான் என் வழக்கப்படி உணர்ச்சி பரவசத்துடன் பதில் கூறினேன்.அப்போது அவர் “மலையாளத்தில் ’பிரகாசம் பரத்துந்ந பெண்குட்டி’ என்றொரு…
பனி உருகுவதில்லை ஒலி வடிவில்
என் பனி உருகுவதில்லை நூலின் ஒலி வடிவத்தினை ’கதை ஓசை’ தீபிகா அருண் செய்துள்ளார். இந்த ஒலி வடிவத்தினை அமேசான் கிண்டில் ஒலி வடிவிலும் (Audible), யூடியூபிலும் கேட்கலாம். தீபிகா ’கதை ஓசை’ என்னும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். தமிழ் இலக்கியம், வணிகக் கதைகள் எனத் தமிழின் முக்கியமான கதைகள் அனைத்தையும் அவர் பக்கத்தில் ஒலி வடிவில் மாற்றியிருக்கிறார். ஜெயனின் “யானை டாக்டர்”, “டார்த்தீனியம்” கதைகள் முன்பே இத்தளத்தில் வந்தன. மேலும் புதுமைப்பித்தன், கு.ப.ரா, லா.ச.ரா,…
நடவுகால உரையாடல் – சக்குபாய்
ஆதிவாசிக் குடும்பங்களில் வீட்டிலுள்ள உணவுத் தானியங்கள் தீர்ந்து போய்விட்டால், தங்கள் சிறுமிகளை வேறு வீடுகளுக்குக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்புவார்கள்; இதற்குக் கூலியாகத் தானியம் கிடைக்கும். சக்குபாயும் சிறுவயதில் இந்த வேலைக்கு அனுப்பப்பட்டாள். சிறுமியான அவளால் குழந்தையைத் தூக்கக்கூட முடியாது; அவளால் முடிந்ததெல்லாம் தொட்டிலை ஆட்டுவதுதான். ஏன், எதற்கு என்று உணராமலேயே வாழ்க்கையின் பல அனுபவங்களினுள் தள்ளப்பட்டிருக்கிறாள் சக்குபாய். ஆனால் இவற்றிலிருந்து ஒரு போராளியாக சக்குபாய் மீண்டு வந்திருக்கிறார். `கஷ்டகரி சங்கட்டனா’வின் உறுப்பினர் என்ற நிலையில் இன்று…
ஆகுதி அமைப்பு ஒருங்கிணைத்த நூல் விமர்சன அரங்கு
கடந்த 09-04-2022 அன்று என்னுடைய ’பனி உருகுவதில்லை‘ நூலுக்கு ஒரு விமர்சன அரங்கை ஆகுதி பதிப்பகத்தின் சார்பில் எனது நண்பர் திரு. அகர முதல்வன் ஒருங்கிணைத்து நடத்தினார். அதை எழுத்தாளர் அ. வெண்ணிலா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். எழுத்தாளர் ஜா. தீபா, எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர் பிகு, பண்பலை தொகுப்பாளர் அருந்தமிழ் யாழினி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நான் இறுதியில் ஏற்புரை வழங்கினேன். *** அருந்தமிழ் யாழினி உரை: *** பி.கு உரை: ***…
எரிக் க்ளாப்டன்: அத்தனை மேலே அத்தனை கீழே
காதலி ஒரு விருந்துக்கு செல்ல தயாராகிறாள். காதலன் காத்திருக்கிறான். குறுகிய அக்கால அவகாசத்தில் அவன் எழுதிய பாடல் பெரும் புகழ்பெறுகிறது. மிக, மிக எளிமையான வரிகள். கணவன் தன் மனைவியிடம் ஆத்மார்த்தமாக பேசும் வரிகள் போன்றவை. அப்பாடல்தான் ’வொண்டர்ஃபுல் டுநைட்”. மென் ராக் இசை வகைமையை சார்ந்தது. அதை எழுதி பாடியவர் எரிக் பாட்ரிக் க்ளாப்டன் [Eric Patrick Clapton]. உலகின் புகழ்பெற்ற ராக்-ப்ளூஸ் இசை நட்சத்திரங்களில் ஒருவர். அவருடைய கிடார் இசைக்காகவும், குரலுக்காகவும் அறியப்பட்டவர். ஒரு…
நான்கு பூங்கொத்துகள்
ஸ்கார்பரோ சந்தைக்கு போகிறீர்களா?பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள்.அங்கே வசிக்கும் ஒருத்திக்கு என்னை ஞாபகப்படுத்துங்கள்.என் உயிரினும் மேலான காதலியாக இருந்தவள். (வனத்தின் அடர்பச்சை நிறத்தில்)மெருகுடைய ஒரு காம்பிரிக் சட்டையைஎனக்காக தைக்கச் சொல்லுங்கள்.பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள்,(பனி போர்த்திய நிலத்தில் சிட்டுக்குருவியின் தடங்களை)மடிப்புகளும், தையல் வேலைப்பாடுகளும் இல்லாத ஓர் ஆடையை(மலைக் குழந்தைக்கு இரவாடைகள்…)பிறகு எனது உண்மைக் காதலியாக ஆவாள்.(போருக்கான அழைப்புமணியை உணராமல் உறங்கிக் கொண்டிருக்க…)எனக்காக ஒரு ஏக்கர் நிலத்தை கண்டு வைக்க அவளிடம் சொல்லுங்கள்.(இலை உதிர்ந்து மூடிய….)பார்ஸ்லி,…
நெடுஞ்சாலையில் ஓர் இடம்
மார்ச் 21, 1977, காப்பிடல் செண்டர், லார்கோ, மேரி லாண்ட் , அமெரிக்கா. பித்துநிலையில் இருக்கும் இசைரசிகர்கள் முன்னிலையில் ’ஈகிள்ஸ்’ பாண்ட் முதல் ஆல்பத்தின் ’ஹோட்டல் காலிஃபோர்னியா’ இசைக்கப் பட்டது. அக்காற்றில் இசையின் அதிர்வுகள், கிடாரின் மீட்டல்கள், பித்தாக்கும் ட்ரம்ஸ் இசையுடன் குரல் ஒலிக்க மக்கள் திரள் கட்டுண்டு வயப் பட்டது. ஃபெப்ரவரி, 1977 ல் வெளியிடப்பட்ட அந்த ஆல்பம் அந்த வருடத்திற்குள் ஒரு மில்லியன் கிராமஃபோன் ரெக்கார்டுகள் விற்கப்பட்டு அதுவரையிலான இசை வரலாற்றில் சாதனை படைத்தது.…
கண் மலர்தல் – கடிதங்கள்
பலதடவை கேட்டேன்.கண்மலர்தல் அருமையான தலைப்பு.கேரள இளைஞர் பச்சை மாமலை பாடுவதும். மலர்களே பாடுவதும் ஆச்சரியமாக இருக்கிறதே. ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் கேள்விப்பட்டதே இல்லை. இனிய காலையாக்கிவிட்டீர்கள்.அன்புடன், எழுத்தாளர் ஆ.முத்துலிங்கம். *** மேடம், சாதாரணமாக எழும் அந்த நாள் துலங்கத் துலங்க பொன்னாக ஒளிர்கிறது. ஒரு நாள் மலர்தல் என்பது நம் அகம் துலங்குதல் தான். இருள் நீங்கி கோயில் கோபுரங்கள் தரிசனம் ஆகி உள்செல்லும் காட்சியும் அருகே காவிரியின் அந்த தண்மையும் விழித்து எழுந்தவுடன் மீண்டும் கனவுக்குள் செல்வது…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Follow My Blog
Get new content delivered directly to your inbox.