கண் மலர்தல் – கடிதங்கள்

பலதடவை கேட்டேன்.
கண்மலர்தல் அருமையான தலைப்பு.
கேரள இளைஞர் பச்சை மாமலை பாடுவதும். மலர்களே பாடுவதும் ஆச்சரியமாக இருக்கிறதே. ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் கேள்விப்பட்டதே இல்லை. இனிய காலையாக்கிவிட்டீர்கள்.
அன்புடன்,

எழுத்தாளர் ஆ.முத்துலிங்கம்.

***

மேடம்,

சாதாரணமாக எழும் அந்த நாள் துலங்கத் துலங்க பொன்னாக ஒளிர்கிறது. ஒரு நாள் மலர்தல் என்பது நம் அகம் துலங்குதல் தான். இருள் நீங்கி கோயில் கோபுரங்கள் தரிசனம் ஆகி உள்செல்லும் காட்சியும் அருகே காவிரியின் அந்த தண்மையும் விழித்து எழுந்தவுடன் மீண்டும் கனவுக்குள் செல்வது போல இருந்தது. குதிரை யானை பசு முக்குணத்தையும் குறிப்பது போல இருந்தது, விடியும் போது நம்முள் முக்குணமும் எழுகிறது. இதுவே ஒரு அற்புத தரிசனம், பின்னர் கரிய தெய்வத்தைப் பார்ப்பது ஒரு இரட்டை தரிசனம். பின்னர் கோயில் வீதியில் காப்பிக் கடையும், வயல் வெளியிலும் அத் தரிசனம் நீடித்து நிற்கிறது. உங்கள் தந்தை நாதிகர், இப்படி ஒரு காலையை அருளி அவரையும் தெய்வம் ஆசீர்வதித்து விட்டது. தெய்வம் தன்னை மறுப்போருக்கும் தரிசனம் வழங்கும்.

விஷ்ணுபுரம் படித்த யாருக்கும் இந்த தரிசனம் முக்கியமானது. நான் உண்டவள்ளியில் கண்ட ராணி கி வாவில் கண்ட காளிச்சரன் கட்டுரையில் கண்ட அதே பெருமாள் கண்மலர்தலில்.

ஊர் நீங்கும் இறுதி நாளில் அம் மண்ணை ஆளும் தெய்வத்தை முதன்முறை தரிசித்தல் என்கிற வடிவம் துலங்கியவுடன் தோன்றியது இது ஒரு கலையமைதி பெற்ற படைப்பு, அனந்த சயனர் போலவே. கட்டுரை வளர்ந்து சென்று பாடலில் முடிவது ஒரு ஓவியக் காட்சிக் கூடத்தில் செல்லும் போது எதிர்பாராமல் ஒரு இசைக் கச்சேரி நிகழ்வது போல. பச்சைமாமலை ஒரு காட்சி வடிவம், கூடவே அது ஒரு இசை வடிவம்.

மெல்ல மெல்ல ஒரு கம்பத்தில் கொடியேறி உச்சியில் விரிந்து பட படத்து பறக்கும் அனுபவம் இக் கட்டுரை.

கிருஷ்ணன்,
ஈரோடு.

***

வழக்கம் போல் அபாரமான கட்டுரை.

நீங்கள் ஆரம்பிக்கும் போது எந்த இடத்தில் பாடல்களைக் கொண்டுவ்ரப் போகிறீர்கள் என்பதை உய்த்துணரவே முடிவதில்லை.

கட்டுரையை திறந்ததுமே என்ன பாடல்கள் இணைத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டாலும் கூட அதை நீங்கள் அனுபவத்தோடு இணைக்குமிடம் அருமை
பூரண கொழுக்கட்டைக்கு மேல் மாவு போல அழகிய இணைவு
அளவான உப்பிட்டு, பதமாய் கிளறிய மாவுதான் அழகாய் பூரணத்தை அடக்கிக் கொள்ள முடியும். பதம் உணர்ந்த கரங்கள் உங்களுடையது🌺🌺🌺

எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன்,

சென்னை.

***

பிரமாதம் அக்கா.

நானும் அஜிதனும் இப்படிப்பட்ட பயணம் ஒன்று செய்து அரங்கனை பார்த்தோம்.

எழுதி பார்த்து சரியாக வராமல் நான் தூக்கி போட்ட பல பதிவுகளில் அதுவும் ஒன்று.

ஆகவே உங்களின் இந்த பதிவு பொறாமை கொள்ள வைக்கிறது.

பதிவுக்குள் வரும் பொழுது வர்ணனையும் (அதன் ஆர்க்) அரங்கனின் பள்ளி எழுச்சியும்
இசையும் பதிவின் தலைப்பும் இணைகயில் அது அடையும் கவித்துவ உச்சம் அலாதியானது.

Akka
Once again you have proved, that you are a complete writer.

கடலூர் சீனு

***

//இசைக்கு நம்மை காலப்பிரயாணத்தில் முன்னும் பின்னுமாக கொண்டுசெல்லும் ஒரு வல்லமை உண்டு. //

இதை நான் உணர்ந்ததுண்டும்மா… சில பாட்டு… சில வாசனை… ஒரு காலத்தை நமக்கு ஞாபகப் படுத்துகிறது… ஒட்டுமொத்த நினைவுகளையும் மீட்டிக்கொள்ள ஒரு பாட்டை காலமென்னும் பரிமாணத்திற்குள் பத்திரப்படுத்திய அருணாக்குட்டிக்கு அன்பு முத்தங்கள்❤️

நீங்கள் கொடுத்த பாடல்களை இந்த நாள் முழுவதும் தவழவிட்டுக் கொண்டிருப்பேன்😍
உங்கள் இசைக் கட்டுரைகள் வழி… நல்ல இசையை தெரிந்து கொள்கிறேன்… அதோடு நீங்கள் கடத்தும் உணர்வு இன்னுமின்னும் அதை அணுக்கமாக்குகிறது

இரம்யா,

கழுகுமலை

***

Leave a comment