பனி உருகுவதில்லை ஒலி வடிவில்

என் பனி உருகுவதில்லை நூலின் ஒலி வடிவத்தினை ’கதை ஓசை’ தீபிகா அருண் செய்துள்ளார். இந்த ஒலி வடிவத்தினை அமேசான் கிண்டில் ஒலி வடிவிலும் (Audible), யூடியூபிலும் கேட்கலாம்.

தீபிகா ’கதை ஓசை’ என்னும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். தமிழ் இலக்கியம், வணிகக் கதைகள் எனத் தமிழின் முக்கியமான கதைகள் அனைத்தையும் அவர் பக்கத்தில் ஒலி வடிவில் மாற்றியிருக்கிறார். ஜெயனின் “யானை டாக்டர்”, “டார்த்தீனியம்” கதைகள் முன்பே இத்தளத்தில் வந்தன. மேலும் புதுமைப்பித்தன், கு.ப.ரா, லா.ச.ரா, கல்கி, சாண்டில்யன், நா. பார்த்தசாரதி கதைகளை ஒலி வடிவில் கொடுத்திருந்தார்.

தீபிகா கதை ஓசை.காம் என்ற வலைதளமும் வைத்துள்ளார். இவ்வலைதளத்தைப் பார்த்தேன், இது மற்ற வலைத்தளம் போல் இல்லாமல் ஒலி வடிவத்திற்கான பிரத்யேக வலைத்தளமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான் முன்பே அவர் குரலில் யானை டாக்டர் கதையைக் கேட்டிருக்கிறேன். அவர் குரலில் கதையை வாசிக்கும் கணீர் தன்மையும், அதற்கான ஏற்ற இறக்கங்களும் இயல்பில் அமைந்திருக்கிறது. இப்போது பனி உருகுவதில்லை மொத்த நூலையும் ஒலி வடிவில் கொண்டுவந்துள்ளார்.

தீபிகாவிற்கு என் அன்பும், நன்றியும்.

யூடியூபில் கேட்க:

அமேசான் கிண்டில் உள்ளவர்கள் அதன் ஆடிபில் செயலில் கேட்க:

https://www.audible.in/pd/B09V2X347K?source_code=ASSOR150021921000O

***

Leave a comment